‘கோவிட்-19’ தடுப்பூசிகள்

COVID-19-ஐத் தோற்றுவிக்கும் வைரஸ்-இலிருந்து தடுப்பூசிகள் நம்மைப் பாதுகாக்கும். ஆஸ்திரேலியாவில் இருக்கும் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒவொருவரும் அவர்களுடைய இலவச COVID-19 தடுப்பூசியேற்றத்திற்கான முன் பதிவினைச் செய்துகொள்ளலாம்.

COVID-19 தடுப்பூசிகளைப் பற்றி

ஆஸ்திரேலியாவில் இருக்கும் 5 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் அவர்களுடைய தடுப்பூசியைப் பெறுவதற்கான முன்பதிவினை இப்போது செய்துகொள்ளலாம்.

சிகிச்சையகம் ஒன்றைக் கண்டறிந்து முன்பதிவைச் செய்துகொள்ளுங்கள்

ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் COVID-19 தடுப்பூசிகள் இலவசம். ‘மெடிகெயர்’ அட்டை இல்லாதவர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பவர்கள், சர்வதேச மாணவ-மாணவியர்கள், புலம்-பெயர்த் தொழிலாளர்கள் மற்றும் அடைக்கலம் நாடிக்கொண்டிருப்பவர்கள் ஆகியோர் இதில் உள்ளடங்குவர். தடுப்பூசி இட்டுக்கொள்வதானது உங்களையும், உங்களுடைய குடும்பத்தினரையும், உங்களுடைய சமூகத்தினரையும் ‘கோவிட்-19’-இல் இருந்து பாதுகாக்க உதவும்.

தடுப்பூசியேற்றத்தினை ஆஸ்திரேலிய அரசாங்கம் சட்டப்படிக் கட்டாயமாக்கவில்லை, மற்றும் COVID-19-இற்கு எதிரான தடுப்பூசியை இட்டுக்கொள்ளமலிருக்கும் தெரிவினை நீங்கள் மேற்கொள்ளலாம்

குறிப்பிட்ட சில சூழல்களில், சில மாநில மற்றும் எல்லைப்-பிரதேச பொது சுகாதார உத்தரவுகள் தடுப்பூசியேற்றத்தினைக் கட்டாயமானதாக்கலாம். உதாரணத்திற்கு, சில வகைப்பட்ட வேலைகளுக்கும், சில சமூக நடவடிக்கைகளுக்கும் இப்படிச் செய்யப்படலாம்.

தடுப்பூசிகள் இலவசம்

COVID-19 தடுப்பூசிகளை இட்டுக்கொள்வது பாதுகாப்பானது, மற்றும் இது உயிர்களைக் காக்கும். ஆஸ்திரேலியாவில் COVID-19 தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் அதன் பக்க விளைவுகளையும் Therapeutic Goods Administration (TGA) எனும் அமைப்பு தொடர்ந்து உன்னிப்பாய்க் கண்காணித்துவருகிறது.

ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் ஒவ்வொரு தடுப்பூசியைப் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்:

இந்த வைரஸுடன் உங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டால், அதை எப்படி ஒழித்துக்கட்டுவது என்பதை COVID-19 தடுப்பூசிகள் உங்களுடைய சரீரத்திற்குக் கற்றுத் தரும்.

உங்களுடைய தடுப்பூசியை நீங்கள் இட்டுக்கொண்ட பிறகு உங்களுக்குக் கேள்விகளோ, கவலைகளோ இருந்தால், உங்களுடைய தடுப்புசியேற்ற சிகிச்சையகத்துடன், அல்லது உங்களுடைய மருத்துவருடன் தொடர்புகொள்ளுங்கள்.

உங்களுடைய தடுப்பூசியேற்றத்திற்குப் பிறகு என்ன எதிர்பார்க்கவேண்டும் என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

யார் தடுப்பூசிகளை இட்டுக்கொள்ள வேண்டும்

5 மற்றும் இதற்கு மேற்பட்ட வயதுடைய ஒவ்வொருவரும் COVID-19 -இற்கு எதிரான தடுப்பூசிகளை இட்டுக்கொள்ளவேண்டும்.

COVID-19 காரணமாக தீவிர நோய்க்கு ஆளாவதிலிருந்து, அல்லது மரணிப்பதிலிருந்து COVID-19 தடுப்பூசி ஒன்றை இட்டுக்கொள்வது உங்களைப் பாதுகாக்கும்.

இந்த வைரஸ்-இன் பரவல் வேகத்தைக் குறைப்பதன் மூலமாக உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பாதுகாக்கவும் தடுப்பூசி இட்டுக்கொள்வது உதவும்.

COVID-19 தடுப்பூசியேற்றத்தைப் பொறுத்து நடப்பு-நாள் வரை சரியான நிலையில் இருப்பவராகக் கருதப்படுவதற்கு உங்களுடைய வயதிற்கும், உடல்நிலைக்கும் ஏற்ப சிபாரிசு செய்யப்படும் அனைத்து மருந்தளவுகளையும் நீங்கள் அவசியம் இட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

5 செப்டம்பர் 2022 முதல், 6 மாதங்கள் முதல் 4 ஆண் டுகள் வரைக்குமான வயதுள்ள நோயெதிர்ப்புத் திறன் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள, இயலாமை ஒன்று உள்ள மற்றும் COVID-19 ஏற்படும் ஆபத்தினை அதிகப்படுத்தும் சிக்கலான மற்றும்/அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் COVID-19 தடுப்பூசிக்குத் தகுதிபெறுவார்கள்.

முன்பதிவுகள் விரைவில் கிடைக்கும். சந்திப்புவேளை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்காக உங்களுடைய மருத்துவரை இப்போதே அழைக்காதீர்கள். முன்பதிவுகள் எப்போது துவங்குகின்றன என்பதையும், எப்படி முன்பதிவைச் செய்வது என்பதையும் உங்களுக்குத் தெரிவிப்போம்.

6 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரைக்குமான வயதுள்ள குழந்தைகள் பின் வருவனவற்றைப் பெறவேண்டும்:

  • COVID-19 தடுப்பூசியின் 1 மற்றும் 2-ஆம் ஆரம்ப-நிலை மருந்தளவு
  • அவர்கள் நோயெதிர்ப்புத்-திறன் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்களேயானால், ஆரம்ப-நிலை 3-ஆம் மருந்தளவு.

5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகள் பின் வருவனவற்றைப் பெற வேண்டும்:

  • COVID-19 தடுப்பூசியின் 1 மற்றும் 2-ஆம் ஆரம்ப-நிலை மருந்தளவு
  • அவர்கள் நோயெதிர்ப்புத்-திறன் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்களேயானால், ஆரம்ப-நிலை 3-ஆம் மருந்தளவு.

12 முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் பின் வருவனவற்றைப் பெற வேண்டும்:

  • COVID-19 தடுப்பூசியின் 1-ஆவது மற்றும் 2-ஆவது ஆரம்ப-நிலை மருந்தளவு
  • அவர்கள் நோயெதிர்ப்புத்-திறன் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்களேயானால், ஆரம்ப-நிலை 3-ஆம் மருந்தளவு.
  • பின் வருவன அவர்களுக்குப் பொருந்துமேயானால், COVID-19 தடுப்பூசியின் ஊக்க மருந்தளவு ஒன்று:
    • நோயெதிர்ப்புத்-திறன் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களாக அவர்கள் இருப்பார்களேயானால்
    • குறிப்பிடத்தக்க அளவிலான, அல்லது சிக்கலான இயலாமை ஒன்று அவர்களுக்கு இருந்தால்
    • தீவிர COVID-19 ஏற்படும் ஆபத்தினை அதிகப்படுத்தும் சிக்கலான மற்றும்/அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் அவர்களுக்கு இருந்தால்.

உங்களுடைய பிள்ளைக்கு ஊக்க ஊசி ஒன்று தேவைப்படுமா என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால் உங்களுடைய மருத்துவருடன் பேசுங்கள்.

16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒவ்வொருவரும் பின் வரும் தடுப்பூசி மருந்தளவுகளை இட்டுக்கொள்ள வேண்டும்:

  • COVID-19 தடுப்பூசியின் 1-ஆவது மற்றும் 2-ஆவது ஆரம்ப-நிலை மருந்தளவு
  • அவர்கள் நோயெதிர்ப்புத்-திறன் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களாக
  • இருப்பார்களேயானால், ஆரம்ப-நிலை 3-ஆம் மருந்தளவு
  • COVID-19 தடுப்பூசியின் ஊக்க மருந்தளவு ஒன்று.

நான்காவது மருந்தளவுகள்

தீவிர நோய்வாய்ப்படும் ஆபத்து அதிகமாக உள்ளவர்களுக்கு, அவர்களுடைய முதலாவது ஊக்க ஊசியை அவர்கள் இட்டுக்கொண்டதிலிருந்து 3 மாதங்களுக்குப் பிறகு COVID-19 தடுப்பூசியின் ஊக்க மருந்தளவு அல்லது நான்காவது மருந்தளவு ஒன்று.

நோயெதிர்ப்புத்-திறன் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள், உள்ளார்ந்த மருத்துவ-நிலை அல்லது இயலாமை ஒன்று உள்ளவர்களுக்கு இது ஒரு ஐந்தாவது மருந்தளவாக இருக்கும்.

பின் வருவன உங்களுக்குப் பொருந்தினால், நான்காவது மருந்தளவு ஒன்றை நீங்கள் இட்டுக்கொள்ள வேண்டும்:

  • 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர் என்றால்
  • நீங்கள் முதியோர் பராமரிப்பு அல்லது இயலாமையுடையோர் பராமரிப்பு இல்லம் ஒன்றில் வசிப்பவரானால்
  • நோயெதிர்ப்புத்-திறன் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் (இவர்களுக்கு இது ஐந்தாவது மருந்தளவாக இருக்கும்)
  • 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய Aboriginal (ஆபொரிஜினிப் பூர்வகுடியினர்) அல்லது Torres Strait Islander (‘டோரிஸ்’ நீரிணைத் தீவகத்தவர்)
  • தீவிர COVID-19 ஏற்படும் ஆபத்தினை அதிகப்படுத்தும் மருத்துவ நிலை ஒன்று உள்ள 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்
  • இயலாமை அல்லது சிக்கலான உடல்நலத் தேவைகள் உள்ள 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்.

30 முதல் 49 வயது வரைக்கும் உள்ளவர்களும், அவர்கள் விரும்பினால் நான்காவது மருந்தளவு ஒன்றைப் பெறலாம்.

நான்காவது ஊக்க மருந்தளவு ஒன்றை நீங்கள் இட்டுக்கொள்ளவேண்டுமா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால், உங்களுடைய மருத்துவருடன் பேசுங்கள்.

உங்களுக்கு COVID-19 இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தால், உங்களுடைய அடுத்த COVID-19 தடுப்பூசி மருந்தளவைப் பெறுவதற்கு முன்பாக, COVID-19 தொற்று ஏற்பட்டதிலிருந்து 3 மாதங்கள் வரை நீங்கள் காத்திருக்கவேண்டும் என்று சிபாரிசு செய்யப்படுகிறது.

அவர்களுடைய ஊக்க மருந்தளவைப் பெற்றதற்குப் பிறகு COVID-19 ஏற்பட்டிருப்பவர்களும் நான்காவது மருந்தளவைப் பெறுவதற்கு முன்பு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்குக் காத்திருக்கவேண்டும்.

உங்களுடைய தடுப்பூசிகளைப் பொறுத்து நடப்பு-நாள் வரை சரியான நிலையில் இருக்கவேண்டியது முக்கியம். வெவ்வேறு ஆட்களுக்கு வெவ்வெறு காலங்களில் வெவ்வேறு COVID-19 தடுப்பூசிகள் தேவைப்படலாம். நடப்பு-நாள் வரை சரியான நிலையில் இருப்பதற்கு நீங்களும் உங்களுடைய குடும்பத்தினரும் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள உங்களுடைய சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குநருடன் பேசுங்கள்.

குழந்தைகள்

COVID-19 தடுப்பூசிகள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானவை.

குழந்தைகளுக்குத் தடுப்பூசி இடுவதானது அவர்களுடைய இளைய சகோதரங்களுக்கும், பாட்டன்-பாட்டியாருக்கும், பரந்துபட்ட சமூகத்தினருக்கும் அவர்கள் இந்த வைரஸ்-ஐக் கடத்துவதைத் தடுக்க உதவ இயலும்.

குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான COVID-19 தடுப்பூசிகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

கர்ப்பமாக இருக்கும், அல்லது தாய்ப்பாலூட்டிக்கொண்டிருக்கும் பெண்கள்

நீங்கள் கர்ப்பமாக இருந்தால், தாய்ப்பால் ஊட்டிக்கொண்டிருந்தால், அல்லது கர்ப்பமாகும் திட்டத்தில் இருந்தால், COVID-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. கர்ப்ப நிலையின் எவ்வொரு கட்டத்திலும் நீங்கள் இந்தத் தடுப்பூசியை இட்டுக்கொள்ளலாம்.

கர்ப்ப-நிலை, தாய்ப்பாலூட்டல் மற்றும் COVID-19 தடுப்பூசிகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

இயலாமை உள்ளவர்கள்

இயலாமை உள்ளவர்களுக்கு COVID-19 காரணமாக தீவிர நோய்வாய்ப்படும் ஆபத்து மற்றவர்களுக்கு உள்ளதை விட அதிகமாக இருக்கிறது, ஆகவே அவர்கள் தடுப்பூசிகளை இட்டுக்கொள்ளவேண்டும்.

உங்களுக்கு மேலதிக உதவியோ, ஆதரவுதவியோ தேவைப்பட்டால், 1800 643 787-இல் Disability Gateway Helpline -ஐ அழையுங்கள். அவர்களால் உங்களுக்கான முன்பதிவு ஒன்றைச் செய்ய இயலும்.

மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், ‘மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை’(Translating and Interpreting Service)யை 131 450-இல் அழைத்து Disability Gateway சேவையை அழைக்குமாறு அவர்களைக் கேளுங்கள்.

தற்சமய உடல் நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள்

முன்பிருந்தே இருக்கும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு COVID-19 காரணமாக தீவிர நோய்வாய்ப்படும் ஆபத்து மற்றவர்களுக்கு உள்ளதை விட அதிகமாக இருக்கிறது, ஆகவே அவர்கள் தடுப்பூசிகளை இட்டுக்கொள்ளவேண்டும்.

உங்களுடைய சூழ்-நிலைக்கேற்ற மிகச் சிறந்த தடுப்பூசி எது என்பதைப் பற்றி உங்களுடைய வழமையான சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குநருடன் பேசுங்கள்.

தடுப்பூசிகளை எங்கு இட்டுக்கொள்ளலாம்

பின் வரும் இடங்களில் ‘கோவிட்-19’ தடுப்பூசி ஒன்றை நீங்கள் பெறலாம்:

  • பொதுநல அரசாங்கத் தடுப்பூசியளிப்பு மையங்கள் (கிளினிக்குகள்),
  • தடுப்பூசியளிப்புத் திட்டத்தில் பங்குபற்றும் பொது-மருத்துவ நிலையங்கள்
  • ‘ஆபொரிஜினிப் பூர்வகுடிக் கட்டுப்பாட்டு சமூக சுகாதார சேவைகள்’
  • மாநில மற்றும் எல்லைப்பகுதி தடுப்பூசியளிப்பு சிகிச்சையகங்கள், மற்றும்
  • தடுப்பூசியளிப்புத் திட்டத்தில் பங்குபற்றும் மருந்துக்கடைகள்.

பொது மருத்துவர்களால் தடுப்பூசிக்காக உங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க இயலாது.

உங்களுக்கு மிக அண்மையிலுள்ள தடுப்பூசியிடும் சிகிச்சையகத்தைக் கண்டறியவும், சந்திப்புவேளை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளவும் Vaccine Clinic Finder-ஐப் பயன்படுத்துங்கள். உங்களுடைய தடுப்பூசி சந்திப்புவேளையின் பொழுது தொலைபேசி மூலமாகவோ, நேரடியாகவோ சமூகமளிக்கும் மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால் 131 450-இல் ‘மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை’யினை அழையுங்கள்.

உங்களுக்கு ‘மெடிகெயர்’ அட்டை இல்லை என்றால்

உங்களுக்கு ‘மெடிகெயர்’ அட்டை ஒன்று இல்லையென்றால், பின் வரும் இடங்களில் உங்களுக்கான இலவச தடுப்பூசியை நீங்கள் இட்டுக்கொள்ளலாம்:

  • பொதுநல அரசாங்கத் தடுப்பூசியளிப்பு மையங்கள் (கிளினிக்குகள்)
  • மாநில அல்லது எல்லைப்-பிரதேச தடுப்பூசியேற்ற சிகிச்சையகங்கள்
  • தடுப்பூசியளிப்புத் திட்டத்தில் பங்குபற்றும் மருந்துக்கடைகள்.

‘ஹேய், ஈவா’ – தடுப்பூசியைப் பெறுவதற்கான எளிய வழிமுறை(‘Hey Eva’ – Easy Vaccine Access)

EVA என்பது, COVID-19 தடுப்பூசிக்கான முன்பதிவைச் செய்துகொள்ள மக்களுக்கு உதவுவதற்கான ஒரு எளிய தொலைபேசிப் பதில்-அழைப்பு சேவையாகும். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, வாரம் 7 நாட்களும் EVA சேவை இயக்கத்தில் இருக்கும்.

EVA -விற்கு நீங்கள் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிய பிறகு நீங்கள் பெறும் பதிலில் பின் வரும் விபரங்கள் உங்களிடமிருந்து கேட்கப்படும்:

  • பெயர்
  • நீங்கள் தெரிவு செய்யும் மொழி
  • நீங்கள் தெரிவு செய்யும் திகதி மற்றும் நேரம்
  • உங்களைத் திரும்ப அழைப்பதற்கு ஏற்ற தொலைபேசி இலக்கம்.

உங்களுடைய COVID-19 தடுப்பூசியேற்றத்திற்கான முன்பதிவைச் செய்துகொள்வதில் உங்களுக்கு உதவுவதற்காக National Coronavirus Helpline -இல் இருந்து பயிற்சி பெற்ற தொலைபேசி இயக்குநர் ஒருவர் குறிப்பிடப்பட்ட நேரத்தில் உங்களை அழைப்பார்.

COVID-19 தடுப்பூசிகளைப் பற்றிய தகவல்களையும், அறிவுரைகளையும் EVA அளிக்கும், அத்துடன் பின் வரும் விடயங்களில் உங்களுக்கு இந்த சேவை உதவும்:

  • COVID-19 தடுப்பூசிகளப் பற்றிய தகவல்களையும் அறிவுரைகளையும் அளிப்பதில்
  • நீங்கள் நேரடியாகச் செல்லக்கூடிய சிகிச்சையகம் ஒன்றைக் கண்டறிவதில்
  • உங்களுக்குத் தகுந்த தடுப்பூசியேற்ற சந்திப்புவேளை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதில்
  • இலவச மொழிபெயர்த்துரைப்பு சேவையுடன் உங்களைத் தொடர்புபடுத்துவதில்.

தடுப்பூசி இட்டுக்கொள்வதற்கான முன்பதிவு ஒன்றைச் செய்வதில் உதவி பெற, ‘Hey EVA’ எனும் வாசகத்தை 0481 611 382 எனும் இலக்கத்தின் மூலம் EVA மீள்-அழைப்பு சேவைக்கு குறுஞ்செய்தி (SMS)-யாக அனுப்புங்கள். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, வாரம் 7 நாட்களும் EVA சேவை இயக்கத்தில் இருக்கும்.

உங்களுடைய COVID-19 தடுப்பூசியை இட்டுக்கொள்வதற்கு முன்பாக

ஏற்கனவே நீங்கள் இப்படிச் செய்திருக்கவில்லை என்றால், சந்திப்புவேளை ஒன்றிற்கான முன்பதிவினைச் செய்துகொள்ளுங்கள்.

சிகிச்சையகம் ஒன்றைக் கண்டறிந்து முன்பதிவைச் செய்துகொள்ளுங்கள்

Medicare அட்டை ஒன்று உங்களுக்கு இருந்தால், உங்களைப் பற்றிய விபரங்கள் நடப்பு-நாள் வரைக்கும் சரியானவையாக இருக்கின்றனவா என்று பாருங்கள்:

உங்களுடைய சந்திப்புவேளைக்கு முன்பாகவோ, இன்னொருவர் சார்பாக தடுப்பூசியிடுவதற்கான முடிவினை நீங்கள் மேற்கொள்கிறீர்கள் என்றாலோ, சம்மதப் படிவம் ஒன்றைப் பூர்த்தி செயுமாறு நீங்கள் கேட்கப்படலாம்.

சம்மதப் படிவத்தினை வாசியுங்கள்.

5 முதல் 11 வயது வரைக்கும் உள்ள குழந்தைகளுக்கான தகவல்கள் மற்றும் சம்மதப் படிவத்தினை வாசியுங்கள்.

உங்களுடைய COVID-19 தடுப்பூசியை நீங்கள் இட்டுக்கொண்ட பிறகு

அரிதான ஒவ்வாமை எதிர்வினை ஒன்று ஏற்படக்கூடும் என்பதற்காக, உங்களுக்குத் தடுப்பூசி இடப்பட்ட பிறகு குறைந்தபட்சமாக 15 நிமிடங்களுக்கு நீங்கள் கண்காணிக்கப்படுவீர்கள். உடனே ஏற்படும் பக்க விளைவுகளுக்கான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பயிற்சி உங்களுக்குத் தடுப்பூசியிடும் நபருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, COVID-19 தடுப்பூசிகளால் ஏற்படும் பக்க விளைவுகள் மிதமானவை, மற்றும் 1 முதல் 2 நாட்களுக்குள் அவை மறைந்துவிடும். பொதுவான பக்க விளைவுகளில் உள்ளடங்குவன:

  • புஜத்தில் ஊசி இறங்கிய இடத்தில் வலி
  • களைப்பு
  • தலைவலி
  • தசை வலி
  • காய்ச்சல் மற்றும் குளிர்க்-காய்ச்சல்கள்.

எவ்வொரு மருந்து அல்லது தடுப்பூசிக்கும் இருப்பதைப் போல, அரிதான, அல்லது இனம் தெரியாத பக்க விளைவுகள் இருக்கலாம். பாரதூரமான பக்க விளைவிகள் உங்களுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று நீங்கள் நினைத்தால், உங்களுடைய சுகாதாரப் பராமரிப்புத் தொழிலருடன், அல்லது National Coronavirus Helpline உடன் தொடர்புகொள்ளுங்கள்.

1800 020 080

மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், National Coronavirus Helpline -ஐ அழைத்து ‘தெரிவு 8’-ஐ மேற்கொள்ளுங்கள்.

தடுப்பூசியேற்றச் சான்று

உங்களுடைய ‘தடுப்பூசியேற்ற வரலாற்று அறிக்கை’ (Immunisation History Statement)-யை அணுகி உங்களுடைய COVID-19 தடுப்பூசியேற்றச் சான்றினை நீங்கள் பெறலாம்.

உங்களுடைய ‘தடுப்பு-மருந்து வரலாற்றுக் கூற்’றினை நீங்கள் பின் வரும் வழிகளில் பெறலாம்:

உங்களுக்கு ‘மெடிகெயர்’ அட்டை ஒன்று இல்லை என்றால், அல்லது myGov கணக்கு வசதி இல்லை என்றால், பின்வரும் வழிகளில் நீங்கள் உங்களுடைய ‘தடுப்பு-மருந்து வரலாற்றுக் கூற்’றினைப் பெறலாம்:

  • பிரதி ஒன்றை உங்களுக்காக அச்சிட்டுத் தருமாறு உங்களுடைய தடுப்பூசி மருந்து வழங்குநரை நீங்கள் கேட்கலாம், அல்லது
  • 1800 653 809-இல் Australian Immunisation Register -ஐ அழைக்கலாம் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை AEST), மற்றும் உங்களுடைய அறிக்கையை தபால் மூலம் அனுப்புமாறு கேட்கலாம். இது தபால் மூலமாக உங்களுக்கு வந்து சேர 14 நாட்கள் வரை ஆகலாம்.

உங்களுடைய ‘கோவிட்-19’ தடுப்பூசியேற்றல் சான்றினைப் பெறுவதைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு Services Australia website எனும் வலைத்தலத்தினைப் பாருங்கள்.

நம்பிக்கைக்குரிய தகவல்களை எங்கிருந்து பெறுவது

நம்பத்தகுந்த மற்றும் அதிகார பூர்வமான மூலங்களிலிருந்து COVID-19 -ஐப் பற்றியும், COVID-19 தடுப்பூசியேற்றத் திட்டத்தினைப் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டியது முக்கியமாகும்.

‘கோவிட்-19’ தடுப்பூசிகளைப் பற்றிய பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

COVID-19 தடுப்பூசிகளைப் பற்றி அநேக மொழிகளில் உள்ள மூலவளங்களைக் கொண்ட information pack (தகவல் பொதி) ஒன்றை நீங்கள் பெறலாம்.

COVID-19 -ஐப் பற்றி உங்கள் மொழியிலுள்ள தகவல்களை வாசியுங்கள்.

மூலவளங்கள்

Help us improve health.gov.au

If you would like a response please use the enquiries form instead.